Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு சதமடித்த புஜாரா…!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (16:01 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸை விளையாடி 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து இந்திய அணி 254 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. புஜாரா மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் அடுத்தடுத்து செஞ்சுரி அடித்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாக விளையாடி வந்த புஜாரா 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதமடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த புஜாரா, மீண்டும் அணிக்குள் வந்து சதமடித்து அசத்தியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments