Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழங்காலில் காயம் –முதல் டெஸ்ட் வாய்ப்பை இழந்த தொடக்க ஆட்டக்காரர்!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (10:45 IST)
ஆஸ்திரேலியா லெவன் அணியோடு நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது முழங்காலில்  அடிபட்டுள்ளதால் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் பிரித்வி ஷா.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டித் தொடர்களிலும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இருபது ஓவர் தொடர் 1-1 என சம்நிலையில் முடிந்துள்ளது. அதையடுத்து டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா லெவன் உடனான 4 நாள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாம் நாளான இன்று பீல்டிங்கின் போது இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா காயமடைந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் காயத்திற்கு முழுமையாக ஒரு வார கால ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் முதல் டெஸ்ட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவிற்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 237 ரன்களை சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments