RCB & SRH ஆகிய இரு அணிக் கேப்டன்களுக்கும் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

vinoth
சனி, 24 மே 2025 (17:19 IST)
பரபரப்பாக நடந்து வரும் இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ஏற்கனவே ப்ளே ஆப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டிகள் ஒரு ஃபார்மாலிட்டிக்காக நடப்பது போல அமைந்தாலும், அதிலும் தகுதி பெறாத அணிகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

இப்போது தேர்வு பெற்ற அணிகளுக்குள் யார் முதலிரண்டு இடங்களைப் பிடித்து மிகவும் பாதுகாப்பான இடத்தைப் புள்ளிப் பட்டியலில் பிடிப்பது என்ற போட்டி எழுந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த ஆர் சி பி அணிக்கு முக்கியமான போட்டியில் அந்த அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோற்றுள்ளது.

இந்த போட்டியில் மெதுவாகப் பந்துவீசியக் காரணத்துக்காக இரு அணிக் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணிக் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு இது முதல் முறை என்பதால் 12 லட்ச ரூபாயும், பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது முறை என்பதால் அந்த அணிக் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் அணியின் வீரர்கள் அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments