Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்…” சோயிப் அக்தர் கருத்து!

“உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்…” சோயிப் அக்தர் கருத்து!
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:43 IST)
உலகக்கோப்பை டி 20 தொடர் இன்னும் 12 நாட்களில் தொடங்க உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது.

டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று. தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த அணி மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் சரியாக விளையாட வில்லை என்றால் அவர்கள் சொதப்பி விடுகிறார்கள். இதனால் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே இருந்து கூட வெளியேறிவிடும். உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என நினைத்தால் இப்படி ஒரு அணியோடு செல்ல கூடாது” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானத்தை தவறவிட்ட ஹெட்மயர்! அணியை விட்டு நீக்கிய வெஸ்ட் இண்டீஸ்!