உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.. ஆஸி. வீரர் கோரிக்கை!

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2024 (07:06 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் இறுதி போட்டி தேதி குறித்த அறிவிப்பை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2021, 2023 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில் மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி அதே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை நடந்த இரு தொடர்களிலும் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருமுறையும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது. இந்நிலையில் ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் “இறுதிப் போட்டியை மூன்று போட்டிகள் கொண்ட நடத்தவேண்டும். அப்போதுதான் ஒரு அணி முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் போராடி தங்களை நிலைநாட்ட வாய்ப்பிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments