Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பு முக்கியம் பிகிலே.. முதன்முறையாக கோப்பையை ஏந்திய நடராஜன்! – வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:42 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கோப்பையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை கொண்டு தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜன்தான் தொடர்ந்து பேசிபொருளாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை தொடர்ந்து அணியினருடன் முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியபடி நடராஜன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது விடாமுயற்சியையும், திறமையையும் பாராட்டி பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments