Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

vinoth
புதன், 13 நவம்பர் 2024 (08:29 IST)
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன.

இதில் கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டுள்ளது முக்கியக் கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் ஒரு போட்டி முடிந்த போது கே எல் ராகுலை, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் அதன் பின்னர் ராகுலை சந்தித்து சஞ்சீவ் கோயங்கா பேசியதால் இருவரும் சமாதானம் ஆகியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ராகுலைக் குறிப்பிடும் விதமாக சஞ்சீவ் கோயங்கா “நாங்கள் எப்படிப்பட்ட வீரர்களை அணியில் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம் என்றால் தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் தன்னலமற்ற வீரர்களைதான்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக கே எல் ராகுல் பேசியுள்ளார். அதில் “நான் எனக்கு எங்கே சுதந்திரமாக விளையாட முடியுமோ அங்கே செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன். சில நேரங்களில் நாம் முன்னோக்கி சென்று நமக்கு நன்மையான சில விஷயங்களை செய்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments