Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (15:09 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

அதன் பின்னர் ஆடிவரும் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கே எல் ராகுல் தவிர மற்ற அனைவரும் சொதப்ப பின்வரிசையில் வந்த ஜடேஜா, பும்ரா ஆகியோர் நிதானமாக ஆடி 252 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்களை இழந்து ஆடி பாலோ ஆனை தவிர்த்துள்ளது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். அவர் இந்த போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து பந்து வீசினால் காயம் அதிகமாகும் என்பதால் அவர் இனி பந்து வீச மாட்டார் எனத் தெரிகிறது.

இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments