Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தம் ஆன இருபதே நாட்களில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கில்லஸ்பி நீக்கம்… என்னதான் நடக்குது பாக். கிரிக்கெட்டில்?

vinoth
திங்கள், 18 நவம்பர் 2024 (08:59 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.

இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து சொதப்பி வந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி வாராவாரம் ஏதாவது மாற்றம் நடந்துகொண்டே இருக்கிறது.

இதனால் பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிரிஸ்டன் ஆறே மாதத்தில் விலகினார். இதையடுத்து புதிய வெள்ளைப்பந்து அணிப் பயிற்சியாளராக ஆஸி அணியின் முன்னாள் பவுலர் ஜேசன் கில்லஸ்பி கடந்த மாத நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரே வாரத்தில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆகிப் ஜாவேத் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments