மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிய இங்கிலாந்து!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (08:03 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் எப்படியாவது மூன்றாவது போட்டியை வென்று தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி ஹெட்டிங்லியில் நடக்க உள்ளது. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் லெவன் அணியை நேற்றே அறிவித்தது இங்கிலாந்து. அதில் அந்த அணியின் மூத்த பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமளிக்கப்படவில்லை. மற்றொரு வீரரான ஜோஷ் டங்கும் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமாக 77 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் மூன்று விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அதனால் அவருக்கு இந்த டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments