Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த சீசனோடு தோனிக்கு எண்ட் கார்டா? சிஎஸ்கே முக்கிய நிர்வாகி பகிர்ந்த தகவல்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (14:20 IST)
சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி அவருக்குப் பதிலாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பொறுப்பு இப்போது ரவீந்தர ஜடேஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோனி ஒரு வீரராக அணிக்குள் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக தோனி மட்டுமே 12 சீசன்களாக பொறுப்பேற்றிருந்தார். அதில் 4 சீசன்களில் சென்னை அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரே ஒரு முறை தவிர மற்ற அனைத்து தடவையும் ப்ளே ஆஃப் சுற்றை தாண்டி சென்றுள்ளது.

தற்போது 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால் இதுவே கடைசி சீசனாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக அணியை தயார் படுத்தவே தோனி இருக்கும்போதே ஜடேஜாவை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ‘தோனி இந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை. அவர் இந்த சீசனை கடந்தும் விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments