Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IPL-2024: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Sinoj
புதன், 27 மார்ச் 2024 (16:09 IST)
ஐபிஎல்-2024 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்தாண்டு 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நேற்றைய சென்னை கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விதிமுறையை மீறிய சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது சென்னைக்கு எதிரான இன்னிங்ஸில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்  20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. எனவே சீசனின் முதல் முறையாக மெதுவாக பந்து சீசிய தவற்றை குஜராத் அணி செய்துள்ளதால், மொத்த அணிக்கும் அபராதம் விதிக்காமல், கேப்டனுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
நேற்றைய போட்டியில்  சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை குஜராத் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.  ஆனால் 20 ஓவரில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.  நேற்றைய போட்டியில் பெரிய வெற்றியைப் பதிவு செய்த சென்னை கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments