Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: சென்னையில் பயிற்சியை தொடங்கிய தோனி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (21:30 IST)
இம்மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் நடக்கவுள்ள நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பயிற்சி மேற்கொண்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, சன்ரைஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன், பெங்களூர் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா  நடை ரைடர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

ஐபிஎல் போட்டித் தொடரில், தோனி தலைமையிலான சென்னை அணி மிக வலுவாக உள்ளதாலும், மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டிகள் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த   நிலையில், தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி நேற்று சென்னைக்கு வந்தார்.
அவரை நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த நிலையில், இன்று, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தின் தோனி  பயிற்சியைத் தொடங்கினார்.

அவருடன் இணைந்து ரஹானே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஹூ சேனாதிபதி, ஷிவம் துபே ஆகிய வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 
அகமதாபாத்தில்  நடக்கும் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் அணி மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments