Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

Advertiesment
ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

vinoth

, வியாழன், 4 ஜூலை 2024 (09:25 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை வென்ற பிறகு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பலரும் மிகவும் எமோஷனலாக காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி  எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியை தாய்நாட்டில் கொண்டாட வேண்டுமென்ற வீரர்களின் ஆசையை இயற்கை சீற்றம் தடுத்தம். அவர்கள் தங்கியிருந்த பார்படாஸ் பகுதியில் பெரில் புயல் வீசியதால் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் 2 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு இன்று அதிகாலை வீரர்கள் மும்பை ஏர்போர்ட் வந்தடைந்தனர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!