Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருத்ரதாண்டவம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி: முதல் டி-20 போட்டியில் 245 ரன்கள் குவிப்பு

ருத்ரதாண்டவம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி: முதல் டி-20 போட்டியில் 245 ரன்கள் குவிப்பு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (21:16 IST)
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் நடைபெற்றுவரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


 
 
மேறிகிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான லீவிஸ் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் சர்வதேச டி.20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் 11-வது ஓவரை பின்னி வீசினார் இந்த ஓவரில் லீவிஸ் தொடர்ந்து  முதல் ஐந்து பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசித் தள்ளினர்.
 
இந்திய பந்து வீச்சை நாலா பக்கமும் பறக்கவிட்ட மேற்கிந்திய தீவு வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
 
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் லீவிஸ் 49 பந்தில் 100 ரன்னும், சார்லஸ் 33 பந்தில் 79 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments