Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீழ்ந்து எழுந்த இங்கிலாந்து அணி நிதான ஆட்டம் - மொய்ன் அலி சதம்

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (18:48 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆனால், தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கேட்டோன் ஜென்னிங்ஸ் 1 ரன்னிலும், கேப்டன் குக் 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால், 21 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது.

பின்னர் ஜோ ரூட் மற்றும் மொய்ன் அலி கூட்டணி அணியை தூக்கி நிறுத்தியது. அணியின் ஸ்கோர் 167ஐ தொட்டபோது ரூட் 88 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பைர்ஸ்டோ 1 ரன்னில் அரைச்சதத்தை தவறவிட்டார். அவர் 49 ரன்களில் வெளியேறினார்.

அபாரமாக ஆடிய மொய்ன் அலி சதம் விளாசினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. மொய்ன் அலி 120 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

அடுத்த கட்டுரையில்
Show comments