3 விக்கெட்களை இழந்தாலும் அதிரடி காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:07 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு  செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங்  இறங்கிய இந்திய் அணி ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான் 13 ரன்களிலும் பிருத்வி ஷா 49 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் 46 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் தற்போது மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவில் இந்தியா 147 ரன்கள் சேர்த்துள்ளது.
  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments