Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்டு களேபரம்! – திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்!

Advertiesment
அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்டு களேபரம்! – திரிணாமுல் எம்.பி சஸ்பெண்ட்!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (12:54 IST)
மத்திய அமைச்சரின் அறிக்கையை கிழித்து போட்ட திரிணாமூல் எம்.பியை சஸ்பெண் செய்து வெங்கைய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென் பிடுங்கி கிழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிக்கையை கிழித்த சாந்தனு சென்னை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் சாந்தனு வெளியேற மறுப்பதால் மாநிலங்களவை மதியம் 2.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிக்கு எவ்ளோ கிலோ மீட்டர் போகும்? – லண்டனில் செய்யப்பட்ட ஐஸ்கட்டி கார்!