Publish Date: Thu, 10 Nov 2022 (08:40 IST)
Updated Date: Thu, 10 Nov 2022 (08:42 IST)
இந்திய அணி இன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
டி 20 உலகக்கோப்பை தொடரின் நாக் அவுட் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடக்க உள்ளது. மதியம் 1.,30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் கடைசியாக விளையாடிய அணியோடு விளையாடுமா அல்லது அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்திய அணி ரிஷப் பண்ட்டை களமிறக்க உள்ளதாகவும், தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
சூப்பர் 12 லீக்குகளில் தினேஷ் கார்த்திக் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.