Webdunia - Bharat's app for daily news and videos

Install App

260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா.. மழையால் ஐந்தாம் நாள் ஆட்டம் பாதிப்பு!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (06:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர்.

இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா ஒரு சில பந்துகளிலேயே கடைசி விக்கெட்டை இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி தொடங்கவிருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாகியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்தடுத்தத் தோல்விகள்… இந்த ஆண்டில் மட்டும் சி எஸ் கே அணி இழந்த பெருமைகள்!

தோனியின் ஆட்டத்தைப் பார்க்கவந்த AK.. தோல்வியிலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments