Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போது எங்கள் நிரந்தர அணியைக் கன்டறிந்துள்ளோம்… முதல் வெற்றிக்குப் பின் ஹர்திக்!

vinoth
திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:20 IST)
இந்த ஐபிஎல் சீசனில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. டெல்லிக்கு  எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரோஹித், இஷான் கிஷான், டிம் டேவிட் மற்றும் ரொமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

இதையடுத்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் மும்ப இந்தியன்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் வெற்றிக்குப் பின் பேசிய ஹர்திக் பாண்ட்யா தங்கள் அணியின் ஆடும் லெவனை கண்டடைந்துவிட்டதாக பேசியுள்ளார்.

அதில் “இந்த சீசனில் எங்கள் அணிக்கான 12 பேரை நிர்ணயிக்க வேண்டிய தேவை இருந்தது. அதை இப்போது கண்டடைந்து விட்டோம். எங்கள் அணிக்குள் ஓய்வறையில் அன்பும் ஆதரவும் நிறைய இருந்தது. தோல்வியில் இருந்து மீண்டுவர ஒரே ஒரு வெற்றி தேவை என அனைவரும் நம்பினோம். பவர்ப்ளே ஓவர்களில் நல்ல தொடக்கம் கிடைத்தது. அதன் பிறகு ரொமாரியோ ஷெப்பர்ட் துவம்சம் செய்து விட்டார்.  இந்த வெற்றியை அவர்தான் எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளார். இன்று நான் பந்துவீச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் சரியான நேரத்தில் பந்துவீசுவேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments