அவரை ஏன் நம்பவில்லை… ரோஹித் ஷர்மாவை கேள்விக் கேட்கும் கம்பீர்!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (07:21 IST)
உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி கடைசியில் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்த போது சூர்யகுமார் யாதவ்வை இறக்குவதற்கு பதில் ரவீந்தர ஜடேஜாவை இறக்கினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால் இந்த மாற்றுத் திட்டம் பெரிதாக பலனளிக்கவில்லை. இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதை தவறு என குறிப்பிட்டு பேசியுள்ளார் கம்பீர். இதுகுறித்து பேசிய அவர் “சூர்யாவுக்கு பதில் ஏன் ஜடேஜாவை அனுப்பினார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சரியான திட்டம் என என்னால் எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. கோலி அவுட் ஆனதும் சூர்யகுமார் யாதவ்வை அனுப்பி அவரின் இயல்பான ஆட்டத்தை விளையாட சொல்லி இருக்கலாம். சூர்யகுமாரை ஆடவைப்பதில் உங்களுக்கு தயக்கம் இருக்கிறது என்றால் நீங்கள் அவருக்கு பதில் வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாமே” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments