Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்நாள் முழுவதும் நிர்வாகியா இருக்க முடியுமா? – சூசகமாக சொன்ன கங்குலி!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (08:27 IST)
பிசிசிஐ (BCCI) தலைவராக தான் தேர்வு செய்யப்படாதது குறித்து சவுரவ் கங்குலி சூசகமாக பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக ஜெய்ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா மற்றும் பொருளாளர் அஷிஷ் ஷெலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும், மற்றொரு பக்கம் அவர் பாஜக அரசியலுக்கு ஆதரவாக பேச மறுத்ததால் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்கப்படவில்லை என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சவுரவ் கங்குலி “காலம் முழுவதும் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது. அதுபோல வாழ்நாள் முழுவதும் நிர்வாகியாக இருக்க முடியாது. நிராகரிக்கப்படுவது வாழ்க்கையின் ஓர் அங்கம்” என சூசகமாக பேசியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments