டி 20 கிரிக்கெட்டின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்து இமாலய வெற்றி!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (09:20 IST)
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 234 ரன்கள் சேர்த்து அசத்தியது. சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து அணி சார்பாக பேர்ஸ்டோ 90 ரன்களும் மொயின் அலி 52 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments