Webdunia - Bharat's app for daily news and videos

Install App

188 ரன்கள்க்குள் சுருண்ட இங்கிலாந்து… இந்த டெஸ்ட்டும் போச்சா?

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (16:52 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் சேர்த்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில்  மூன்றை வென்ற ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதையடுத்து ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நேற்று ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதையடுத்து ஆஸி அணியில் ஒரு புறம் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தாலும், அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடி சதமடித்தார். இதனால் ஆஸி அணி 303 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து ஆஸி வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி அணியின் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்த, ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

2007 ல் கேப்டனாக விட்டதை 2024 ல் பயிற்சியாளராக சாதிப்பாரா ராகுல் டிராவிட்?

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments