சில போட்டிகளுக்குப் பிறகா?... இதுதான் எங்கள் மூன்றாவது வெற்றி- தோனி ஜாலி பதில்!

vinoth
வியாழன், 8 மே 2025 (07:31 IST)
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

அதன்பிறகு ஆடிய சி எஸ் கே அணி 6 ஓவர்களிலே 65 ரன்கள் சேர்த்தாலும் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் வெற்றி பெறுவது கடினமான நிலையில் இளம் வீர்ர டிவால்ட் பிரவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஆவது ஓவரில் 183 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. தோனி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறவைத்தார்.

இந்த சீசனில் 23 நாட்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதுபற்றி போட்டி முடிந்ததும் வர்ணனையாளர் “சில போட்டிகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு தோனி சிரித்துக் கொண்டே “சில போட்டிகளுக்குப் பிறகா? இதுதான் இந்த சீசனில் எங்கள் மூன்றாவது வெற்றி. வெற்றி பெறுவது எப்போதும் நல்ல உணர்வுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே படைத்த 3 சாதனைகள்..!

உள்நாட்டு போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும்: பிசிசிஐ அறிவுறுத்தல்..!

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments