Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினை ஏலத்தில் எடுப்போம்: தோனி நம்பிக்கை!!

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:56 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் நிறைவடைந்ததை அடுத்து, இரண்டு வருட தடை முடிந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது சிஎஸ்கே அணி. இதனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
சிஎஸ்கே அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அணியில் தக்கவைக்கப்படாடது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சில விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் ஆங்காங்கே காணப்பட்டது. இதையடுத்து தோனி சிஎஸ்கே-யில் மீண்டும் விளையாடுவது குறித்து பேசியுள்ளார். 
 
தோனி கூறியதாவது, வலிமையான அணியை தேர்வு செய்வதே எங்களது நோக்கம். அஸ்வினை நிச்சயம் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியில் உள்ளூர் வீரர்கள் இடப்பெறுவது அவசியம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments