வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:09 IST)
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.  ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்லும். சென்னை அணியின் சூப்பர் ஸ்டாரான தோனி இந்த சீசனில் எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார்.

அவருக்கு காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அதிகபட்சம் 2 அல்லது 3 ஓவர்கள்தான் விளையாட முடிவதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார். முழங்கால் காயத்தால் அவதிப்படும் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில போட்டிகளாக காயத்தால் அவதிப்பட்ட அவர் இப்போது காயத்தில் இருந்து முழுவதும் குணமாகியுள்ளார். ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் பவுலிங் செய்து அசத்தியுள்ளார். இது சி எஸ் கே அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முக்கிய வீரர் விலகல்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி திட்டம் என்ன?

27 வயதான மாடல் அழகியுடன் 15 வயது ரொனால்டோ மகன் டேட்டிங்? புகைப்படம் வைரல்..!

ஐபிஎல் 2026: கடைசி நேரத்தில் திடீரென புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ.. வீரர்கள் அதிருப்தி..!

மும்பை அணியின் கேப்டனுக்கு ஹர்திக் பாண்டியா தகுதி இல்லை.. சூர்யகுமார் யாதவ்வை போடுங்க: அஸ்வின்

பாகிஸ்தான் வந்தால் கொல்வோம்: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிரட்டல் விடுத்த வன்முறை இயக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments