“தோனியும் டீசல் எஞ்சினும் ஒன்னுதான்… நிக்காம ஓடிகிட்டே இருக்கும்” – முன்னாள் வீரர் கருத்து!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (07:33 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் சி எஸ் கே 10 அணிகளும் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான வீரர்கள் தங்கள் அணிகளோடு இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டனர். சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனி கடந்த மாத இறுதியிலேயே சென்னை வந்து பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தோனியை டீசல் எஞ்சினோடு ஒப்பிட்டு பேசியுள்ளார். அதில் “தோனி டீசல் எஞ்சினைப் போன்ற ஒருவர். டீசல் எஞ்சின் எப்படி நிக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அது போல அவரும் தொடர்ந்து இயங்குகிறார். என்ன ஒரு அற்புதமான வீரர் & கேப்டன். சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சக்தியே தோனி போன்ற சீனியர் வீரர்கள்தான்.” எனக் கூறியுள்ளார். தோனி தன் தலைமையில் 5 முறை ஐபிஎல் கோப்பையை சி எஸ் கே அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

5-0.. இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிரணி! இது இந்திய அணியின் 3வது ஒயிட்வாஷ்..!

பயிற்சியாளர் பதவியில் இருந்து கெளதம் காம்பீர் நீக்கமா? பிசிசிஐ விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments