Publish Date: Mon, 11 Mar 2024 (10:39 IST)
Updated Date: Mon, 11 Mar 2024 (10:58 IST)
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இது அந்த அணியின் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக்கை குஜராத்தில் இருந்து ட்ரேட் செய்யும்போதே அவர் தனக்குக் கேப்டன் பதவி வேண்டுமெனக் கேட்டதாகவும், அதற்கு ஒப்புக்கொண்டே மும்பை இந்தியனஸ் அவரை வாங்கியதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு வீரராக மட்டும் விளையாட உள்ளார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஆக்ஷன் நடக்க உள்ள நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவாரா அல்லது வெளியேறி ஏலத்தில் செல்ல முடிவெடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி ஓய்வுபெற்ற அம்பாத்தி ராயுடு “ரோஹித் ஷர்மா 2025 ஆம் ஆண்டு சி எஸ் கே அணிக்காக விளையாட வேண்டும். தோனி ஓய்வு பெற்றதும் அவர் சிஎஸ்கே அணியை வழிநடத்தலாம்” என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.