Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னர் முன்பே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்… ரிக்கி பாண்டிங் அதிரடி கருத்து!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (09:44 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100வது போட்டியில் சதம் எடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. அதே போட்டியில் அவர் இரட்டை சதமும் அடித்து சாதனை செய்தார். தற்போது 35 வயதாகும் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடி, தலையில் அடிபட்டி கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மீண்டும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி ஐசிசி போட்காஸ்ட்டில் பேசியுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “வார்னர் 100 ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த போது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். தனது சொந்த ஊரில் சிட்னி ரசிகர்களுக்கு முன்பாக விளையாடிய போட்டியோடு விலகியிருந்தால், அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவரின் போராடும் தன்மையே அவரின் கேரியர் எங்கே முடியும் என்பதை நிரூபிக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments