இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

vinoth
திங்கள், 20 மே 2024 (07:53 IST)
நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

இதுபற்றி பலரும் பல கருத்துகளை விமர்சனமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நக்கலாக ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “தோனி ஓய்வை அறிவித்துவிட்டால் சி எஸ் கே அணிக்கான ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். அவர்கள் மற்ற மைதானங்களில் நடக்கும் சி எஸ் கே போட்டிக்கு வரமாட்டார்கள்.

தோனிக்கு இப்போது 42 வயதாகிறது. இன்னும் ஒரு சீசனில் அவரால் விளையாட முடியாது. அடுத்த சீசனில் அவர் விளையாடினால், விரலில் ஒரு சிறு காயம் இருந்தால் கூட அவரின் வயது காரணமாக அது முகத்தில் தெரிந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments