Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலிக்கும் கோலிக்கும் இடையே பிரச்சனை இருந்தது… பரபரப்பைக் கிளப்பிய பிசிசிஐ அதிகாரி!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (08:26 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கும், முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பிரச்சனை இருந்ததாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன.

குறிப்பாக அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கும், கோலிக்கும் இடையே பனிப்போர் நடப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்துவது போல தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி உரையாடலில் “பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கோலியுடன் இணக்கமாக இருந்ததில்லை. அவர் ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் ஆக்குவதையும் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரோஹித்தை பார்க்க க்ரவுண்டுக்குள் ஓடிய ரசிகர்! அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வார்ம் அப் மேட்ச்சில் பங்களாதேஷை பந்தாடிய இந்தியா! – 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

அடுத்த கட்டுரையில்
Show comments