Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுப்பார்களா பூம்ரா & ஸ்ரேயாஸ்?

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (08:41 IST)
இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் முக்கியமான வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருபவர் பும்ரா. ஆனால் முதுகு வலி காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அவர் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடினார்.

அதே போல நடுவரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இருவரும் இப்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பிஸியோதரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரையும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய அணிக்கு கொண்டுவர பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறுசிறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments