Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்மா விளையாடிவிட்டது… கோலியை நீக்கிய தேர்வுக்குழுவே காலி… பிசிசிஐ அதிரடி முடிவு

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (08:48 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு முழுவதுமாக கலைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

ஆனால் இந்த குழு மீது ரசிகர்கள் மிகப்பெரிய அதிருப்தி அடையக் காரணம், விராட் கோலியிடம் இவர்கள் நடந்துகொண்ட விதம்தான். டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக தொடர்வேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவரை ஆலோசிக்காமலேயே ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இது ரசிகர்களுக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்த, அடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments