Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

vinoth
புதன், 3 ஜூலை 2024 (07:10 IST)
இந்திய அணியில் ஒரு காலத்தில் வீரர்கள் மோசமான உடல் தகுதியோடு இருப்பார்கள். அசாத்தியமான கேட்ச்களை பிடிப்பது, பவுண்டரிக்கு செல்லும் பந்தை ஓடித்தடுப்பது போன்றவை எல்லாம் மற்ற அணிகளை விட மந்தமாக இருக்கும். வீரர்களும் அடிக்கடி காயமடைவார்கள். ஆனால் தோனி மற்றும் கோலி ஆகியோரின் வருகைக்குப் பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியது.

கோலி கேப்டன் ஆனதும் அவர் வீரர்களின் பிட்னஸில் கூடுதல் அக்கறைக் காட்டினார். இந்நிலையில்தான் பிசிசிஐ அணித் தேர்வுக்காக யோ யோ டெஸ்ட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தேர்வாகும் வீரர்கள்தான் அணிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற சூழல் நிலவியது. ஆனால் இந்த டெஸ்ட் குறித்து கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது இந்த டெஸ்ட்டை நீக்கிவிடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலாக வேறு சில தேர்வுகளை வைத்து வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வரவிருக்கும் கம்பீர் கூட இந்த தேர்வுமுறைக்கு எதிராகப் பேசியிருந்தார். அதில் “வீரர்கள் திறமை, அவர்களின் பேட்டிங் செயல்பாடு மற்றும் பவுலிங் செயல்பாடு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் தேர்வு செய்யப்படவேண்டும். யோ யோ டெஸ்ட் முடிவுகளை வைத்தல்ல” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்திய அணி வீரர்கள் யோ யோ டெஸ்ட் முடிவுகளின் படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

கோலியுடன் ஒரே அணியில் விளையாட ஆசைப்பட்டேன்… டேவிட் வார்னர் உருக்கம்!

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments