Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

vinoth

, செவ்வாய், 2 ஜூலை 2024 (07:28 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்கள் இலக்கைத் துரத்தியது. விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியாக ஆடி இலக்கை தொடும் தூரத்துக்குக் கொண்டுவந்துவிட்டார். அவர் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய பவுலர்களின் அசத்தலான பவுலிங்காலும் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்ததாலும் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக் கோட்டருகே சூர்யகுமாரின் ஒரு அபாரமான கேட்ச்சால் அவுட்டானார். இந்நிலையில் இப்போது டேவிட் மில்லர் தான் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!