Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சூர்யகுமார் யாதவ் இல்லை… உலகக் கோப்பையில் இவர்தான் ஜொலிக்க போகிறார்…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (09:57 IST)
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார். சிறப்பான ஆட்டத்தால் தற்போது டி 20 தரவரிசையில் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவ்வை விட கே எல் ராகுல்தான் அதிக ரன்களை சேர்ப்பார் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர் என்பதால் அவரால் அதிக பந்துகள் விளையாட முடியும். ராகுல் நிலைத்து நின்று பின்பு அதிரடியாக ஆடுகிறார் என்பதால் அவர்தான் உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் சேர்ப்பார். அதுபோல பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட் வீழ்த்துவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments