மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (09:07 IST)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தன்னுடைய ஏற்பட்ட பார்வை குறைபாடு காரணமாக வெகு விரைவாகவே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் தன்னுடைய சமூகவலைதள சேனல் மூலமாக  கிரிக்கெட் குறித்து தொடர்ந்து தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்துள்ளார். அதன்படி லெஜண்ட்ஸ் சாம்பியன்ஸ்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான தொடரில் தென்னாப்பிரிக்கா  சாம்பியன்ஸ் அணிக்காக அவர் விளையாடவுள்ளார்.  மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தது குறித்து பேசியுள்ள அவர் “என் மகன் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது காண ஆசைப்படுகிறான். அவனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ்.தோனி Fitness ஓகே.. ஆனாலும் அவர் விளையாட விரும்பவில்லை.. சஞ்சு சாம்சன் தான் காரணம்..

சதம் அடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு காயம்.. அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா?

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே படைத்த 3 சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments