அணிக்கு திரும்பி வந்த ABD! ஆர் சி பி அணிக்கு கூடுதல் பலம்!

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:14 IST)
ஆர் சிபி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஏ பி டிவில்லியர்ஸ் அந்த அணியின் ஆலோசகராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. ஒரு ஆலோசகராக அவரை ஆர் சி பி அணி நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி அந்த அணியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார். அப்போது இந்த முடிவையும் அறிவிக்க உள்ளதாக என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் அவர் ஆர் சி பி அணியில் இடம் பெற உள்ளார். ஆனால் வீரராக இல்லை. அணியின் ஆலோசகராக. ஆம் இன்று ஆர் சி பி அணி அதிகாரப்பூர்வமாக ஏ பி டிவில்லியர்ஸை அணியின் ஆலோசகராக நியமித்ததை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ஆர் சி பி அணிக்காக விளையாடி டிவில்லியர்ஸ் அந்த அணிக்கே ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் பலம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே படைத்த 3 சாதனைகள்..!

உள்நாட்டு போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும்: பிசிசிஐ அறிவுறுத்தல்..!

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments