Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:04 IST)
தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட்கள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது.

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் எந்த வீரருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், அதன் பிறகு எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானுக்கு செல்ல அஞ்சி வந்தனர். அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட சில அணிகள் முன்வந்துள்ளன. அதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments