Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்; மக்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன??

Arun Prasath
வியாழன், 23 ஜனவரி 2020 (20:45 IST)
வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் தனியார் செய்திதாள் ஒன்று மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.

வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றப்பின் தாக்கல் செய்யப்படுகிற இரண்டாவது பட்ஜெட் ஆகும். இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இது குறித்து மக்களிடம் இணையத்தில் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் 50 சதவிகிதத்தினர் வருமான வரிச் சலுகையை உயர்த்திட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக நிதியை 30 சதவிகிதத்தினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

விவசாயத்திற்கு  16 சதவிகிதத்தினரும், கட்டமைப்புக்கு 26 சதவிகிதத்தினரும் அதிக நிதியை எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு 11 சதவிகிதத்தினர் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே போல் நுகர்வோர் நலனில் வரியை குறைந்து ஊக்க சலுகை அளிக்க வேண்டும் என 29 சதவிகிதத்தினர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments