Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட வாய்ப்புகளுக்காக படுக்கை... பேட்ட வில்லன் சொன்ன அதிர்ச்சி தகவல்...!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (08:53 IST)
திரைத்துறையை சேர்ந்த ஆண் , பெண் என பாலின வேறுபாடுகள் ஏதுமின்றி பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். தமிழ் சினிமாவில் சின்மயி - வைரமுத்து விவகாரம் முதல் பாலிவுட்டின் ஒரு ஆணே ஆண் நடிகரை படுக்கை அழைத்ததாக பல முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ரன்வீர் சிங் சினிமாவிற்கு நுழைந்த புதிதில் ஆண் ஒருவர் நேரடியாக தன்னிடம், படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு கிடைக்கும் என கூறியதாக தெரிவித்து அதிர்ச்சியளித்தார். மேலும் தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா பேட்டி ஒன்றில், தான் புதுமுகமாக இருந்தபோது ஒருவர் தன் ஆணுறுப்பை காட்டச் சொன்னதாக கூறினார்.

இப்படி ஆண், பெண் பாகுபாடின்றி சினிமாத்துறையில் பாலியல் தொல்லை நடந்து வருவது அனைவ்ருக்கும் தெரிந்துள்ள நிலையில் பேட்ட படத்தின் வில்லன் நடிகரும் பிரபல பாலிவுட் நடிகருமான நவாஸுத்தீன் சித்திக் மட்டும் எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது,  "  சினிமா துறை மிகவும் பாதுகாப்பானது. அதை பற்றி தவறாக பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். சினிமா துறையின் பெயரை கெடுக்க முயற்சிக்கும் சிலரே இப்படியான போலி புகார்களை கூறுகிறார்கள்.

உங்களிடம் திறமை இருக்க வேண்டும். வேலை நடக்காவிட்டால் சினிமா துறை மீது பழியை போட்டு தவறாக பேசுகிறார்கள். எனவே முற்றிலும் போலியானது தான் இந்த மீ டூ இயக்கம் என்றார். என்னை இதுவரை யாரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததில்லை என கூறியுள்ளார். இவரது பேச்சை கேட்டு பாதிக்கப்பட்ட பல நடிகர், நடிகைகள் பெரும் கோபமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோட் படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இருக்குமா?... விஜய் கையில் இருக்கிறது இறுதி முடிவு!

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள்!

தொடங்கியது சல்மான் கான் & முருகதாஸ் இணையும் சிக்கந்தர் பட ஷூட்டிங்!

புஷ்பா 2 ஒதுங்கியதால் ஆகஸ்ட்ர் 15 ரிலீஸ் ரேஸில் இறங்கியுள்ள பாலாவின் வணங்கான்!

கள்ளச் சாராயம் விவகாரம்: அரசுக்கு அறிவுரை சொன்ன கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்