இ பாஸ் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும் – முதல்வர் உறுதி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:53 IST)
தமிழகத்தில் இ பாஸ் வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். அதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். மேலும் இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments