Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நெருக்கடி - புதிய பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கும் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (11:33 IST)
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த 9ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திதார். இதையடுத்து, வெற்றிடமான பிரதமர் பதவிக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கும் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களினால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு, தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ஒருவருக்கு எவ்வாறு பிரதமர் பதவியை வழங்குவது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மாபெரும் நிதி மோசடியுடன், ரணில் விக்ரமசிங்க தொடர்புப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஊழல், மோசடிகளின் ஊடாக பெற்றுக்கொண்ட பணத்தை மீள கையளிக்குமாறே தாம் கோரி வருவதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments