Publish Date: Tue, 19 Feb 2019 (15:29 IST)
Updated Date: Tue, 19 Feb 2019 (15:34 IST)
அனாதையாக விட்டுச்செல்லும் குழந்தைகளால் வழி தெரியாது நிற்கும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜப்பானில் நிலவும் வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் திருடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, பெயர் வெளியிட விரும்பாத ஜப்பானிய பெண்ணொருவர் தனக்கு 53 வயதானபோது, குழந்தை பள்ளிக்கு செல்ல மறுத்ததால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புத்தகப்பை ஒன்றை திருடியபோது பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறுகிறார்.
மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு தற்போது 68 வயதாகும் நிலையில், தனக்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் அதை திருடியபோது பிடிபட்டு ஐந்தாவது முறையாக சிறைவாசத்தை அனுபவித்தார்.
இவ்வாறாக, ஜப்பானில் நிலவும் வேலையின்மை, பெற்றெடுத்த குழந்தைகளின் ஆதரவின்மை ஆகியவற்றின் காரணமாக மூத்தகுடிமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.