Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் என்கவுண்டர்: சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட தாதா

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (12:14 IST)
விழுப்புரத்தைச் சேர்ந்த தாதா ஒருவர் காவல்துறையுடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சென்னை கொரட்டூரில் நடந்த இந்த மோதலில் காவல்துறையினர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மீது பல குற்றவழக்குகள் ஆரோவில் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த இருபது நாட்களாக சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கப் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது.
 
இவரைத் தேடிவந்த விழுப்புரம் தனிப்படை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று மாலை ஏழு மணியளவில் அந்த வீட்டிற்கு வந்தபோது, மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு என்பவருடைய தலையில் தாக்கியதாகவும் இதைடுத்து உடனிருந்த உதவி ஆய்வாளார் பிரகாஷ் என்பவர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
 
இதில் மணிகண்டன் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபுவும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக காவல்துறை கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments