Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு வழக்கு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:50 IST)
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது காவல்துறையின் சிபிசிஐடி பிரிவினர் பாலியல் வல்லுறவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
 
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி , ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் அண்ணன் கொடுத்த புகார் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
 
மேலும், இந்தக் குற்ற செயல்களில் ஈடுபட்ட மணிவண்ணன் என்ற நபரை சிபிசிஐடி தேடிக் கொண்டிருந்த நிலையில் அந்த நபர் சரணடைந்தார்.
 
மணிவண்ணன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதியப்பட்ட பிரிவுகளுடன், கூடுதலாக பாலியல் வல்லுறவு குற்றத்திற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுனர் விவகாரம்: ஒட்டு மொத்த மாநிலங்களுக்கு கிடைத்த வெற்றி: கனிமொழி எம்பி

உங்க பட டிக்கெட் விலைய குறைச்சீங்களா விஜய்? கேஸ் விலை பத்தி பேசாதீங்க! : தமிழிசை செளந்திரராஜன்..!

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அடுத்த கட்டுரையில்