Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் ஊடுருவலை முறியடித்த பாகிஸ்தான்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (19:44 IST)
பாகிஸ்தான் கடல் எல்லையில் நுழைவதற்கு திங்கள்கிழமை இரவு இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
 
பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளரை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு வானொலியான ரேடியோ பாகிஸ்தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
 
அமைதியின் மீதான பாகிஸ்தானின் நாட்டம் காரணமாக அந்த இந்திய நீர்மூழ்கியைத் தாங்கள் தாக்கவில்லை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 
மேலும், தங்கள் நாட்டின் கடல் எல்லையை பாதுகாப்பதில் பாகிஸ்தான் கடற்படைக்கு உள்ள வலிமையைக் காட்டுவதாக இது அமைந்துள்ளது என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார் என்கிறது ரேடியோ பாகிஸ்தான்.
 
இந்தியாவும் பாகிஸ்தானும் மாற்றி மாற்றி எல்லையைத் தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய ஒரு வார காலத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் எல்லை தாண்ட முயன்றதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
 
மேலும், இந்திய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் கடல் ஊடுருவ முயல்வதைக் காட்டும் காட்சி என்று கூறி ஒரு காணொளியையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments