Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானியக் கடற்பரப்பில் விழுந்தது

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (21:11 IST)
வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பேலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட கடல் பரப்பில், தரையிறங்கியுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.


 
 
ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே இந்த செயலை சினத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் ஜப்பானின் பாதுகாப்பிற்கு நேர்ந்த அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார்.
 
இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று கூறிய அமெரிக்கா, ஒன்று ஏவப்பட்டவுடன் வெடித்தது என்றும், தன்னையும், தனது நேச நாடுகளையும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் தீர்மானங்களுக்கு எதிராக வட கொரியா தொடர்ந்து ஏவிவரும் ஏவுகணைகளில் இது மிகச் சமீபமானது.
 
முன்னதாக, வட கொரியா தென் கொரியாவிற்குள் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்துவதை எதிர்த்துள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்பு அடுத்த ஆண்டு ஏற்படுத்தப்படவுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments